For Daily Alerts
Just In
டெல்லி வணிக வளாக மின் கம்பத்தில் மோதிய கார்- 4 பேர் பலி
டெல்லி: டெல்லியில் வணிக வளாகத்தை நோக்கி படு வேகமாக வந்த கார் அங்கிருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.
தெற்கு டெல்லியில் அன்சால் மால் வளாகத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. படு வேகமாக வந்த அந்தக் கார் வணிக வளாகத்தில் இருந்த மின்கம்பம் மீதுமோதியது. மோதிய வேகத்தில் பல முறை பல்டி அடித்து விழுந்து நின்றது.
இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பயங்கர விபத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.
Comments
Story first published: Sunday, May 2, 2010, 12:07 [IST]