For Daily Alerts
Just In
எஸ்.ஏ.ராஜாவுக்கு மாரடைப்பு – மருத்துவமனையில் அனுமதி
நெல்லை: பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள எஸ்.ஏ. ராஜாவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் வடக்கன்குளம் கல்வி நிறுவனர் எஸ்ஏ ராஜா, மதுரை அழகர், பாலமுருகன், ஆறுமுகம் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
எஸ்ஏ ராஜா பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்படுகிறது.
Story first published: Sunday, May 2, 2010, 13:37 [IST]