For Daily Alerts
Just In
600 மில்லியனைத் தொடும் செல்போன் இணைப்புகள்
இந்தியாவில் மொபைல் போன் அறிமுகமான கடந்த 15 ஆண்டுகாலத்தில் மொபைல் வாடிக்கையாளர் எண்ணிக்கை 600 மில்லியன்களாக உயர்ந்துள்ளது.
கடந்த 1995-ம் ஆண்டு முதன் முதலில் மொபைல் போன் இந்தியாவில் அறிமுகமானது. இந்த 2010 மே மாதத்துக்குள் மொபைல் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில் 558.9 மில்லியனாக இருக்கும் என்று கடந்த ஆண்டு கணிக்கப்பட்டது.
ஆனால் குறித்த காலத்துக்கு முன்பே எதிர்ப்பார்த்ததை விட அதிகம்பேர் மொபைல் போனை பயன்படுத்தி வருகின்றனர்.
2014-க்குள் இந்த எண்ணிக்கை ஒரு பில்லியன், அதாவது 100 கோடியைத் தாண்டிவிடும் என கணிக்கப்பட்டுள்ளது.
3 ஜி தொழில்நுட்பம் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துவிட்டால், மேலும் கணிசமான வாடிக்கையாளர் எண்ணிக்கை பெருகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
Comments
Story first published: Monday, May 3, 2010, 10:31 [IST]