For Quick Alerts
For Daily Alerts
Just In
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு- நாடாளுமன்றத்தில் அமளி- ஒத்திவைப்பு
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்குப் பொறுப்பேற்ற ராஜா விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. இந்தநிலையில்இன்று காலை லோக்சபா கூடியதும் ராஜாவின் ராஜினாமாவைக் கோரி பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் பெரும் அமளியில் இறங்கினர்.
அவர்களை அமைதிப்படுத்த முயன்றார் சபாநாயகர் மீரா குமார். இருப்பினும் அமைதி திரும்பவில்லை. இதையடுத்து பிற்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதே பிரச்சினை காரணமாக ராஜ்யசபாவும் ஒத்திவைக்கப்பட்டது.
Comments
நாடாளுமன்றம் அமளி லோக்சபா ராஜ்யசபா ஒத்திவைப்பு parliament minister raja lok sabha rajya sabha ruckus
Story first published: Monday, May 3, 2010, 11:19 [IST]