For Quick Alerts
For Daily Alerts
Just In
பொன்சேகா மீதான ராணுவ கோர்ட் விசாரணைக்கு இலங்கை கோர்ட் தடை
இலங்கையின் அப்பீல் கோர்ட் இந்தத் தடையை விதித்துள்ளது. மே 21ம் தேதி வரை இந்த தடை நீடிக்கும். பொன்சேகாவை ராணுவ கோர்ட் மூலம் விசாரிக்க அதிகாரம் உண்டா என்பதை அப்பீல் கோர்ட் விசாரிக்கவுள்ளது.
இலங்கையில் அதிபர் தேர்தல் முடிவடைந்ததும், அதிரடியாக கைது செய்யப்பட்டார் பொன்சேகா. பின்னர் அவரை ராணுவ கோர்ட் மூலம் விசாரிக்க ராஜபக்சே உத்தரவிட்டார்.
பொன்சேகாவும், அவரது குடும்பத்தினரும் பொன்சேகா ராணுவப் பணியில் இருந்தபோதே, அரசியலில் ஈடுபட்டதாக ராஜபக்சே அரசு குற்றம் சாட்டி ராணுவ கோர்ட் விசாரணைக்கு உத்தரவிட்டது.
Comments
Story first published: Tuesday, May 4, 2010, 10:41 [IST]