For Daily Alerts
Just In
மேலும் 10 அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்கிறது மத்திய அரசு!
டெல்லி: இந்தியன் ஆயில், கோல் இந்தியா உள்ளிட்ட மேலும் 10 நிறுவனங்களின் பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு.
அரசுத் துறையில் இயங்கும் நிறுவனங்கள் 60-ஐத் தேர்ந்தெடுத்து, அவற்றின் கணிசமான பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு. ஏற்கெனவே 11 அரசுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கும் நடவடிக்கைகள் துவங்கிவிட்டன. இவற்றின் மூலம் ரூ 25000 கோடி திரட்டப்படும்.
ஆனால் அரசு ரூ 40000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. எனவே மேலும் 10 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குளை விற்கப் போகிறது அரசு.
இதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், கோல் இந்தியா, ஷிப்பிங் கார்ப்பரேஷன், எம்எம்டிசி, இந்துஸ்தான் காப்பர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும்.
Comments
Story first published: Thursday, May 6, 2010, 15:59 [IST]