For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொசுவர்த்தி சுருளால் ராணுவ கூடாரத்தில் தீ-தமிழக கேப்டன் பலி

Google Oneindia Tamil News

கபூர்தலா : பஞ்சாப் மாநிலம் கபூர்தலா அருகேஅமைக்கப்பட்டிருந்த ராணுவ முகாமின் கூடாரம் தீப்பிடித்து எரிந்ததில், தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ கேப்டன் உயிரிழந்தார்.

கபூர்தலா அருகே உள்ள பகுபூரியான் என்ற இடத்தில், ராணுவ முகாம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு அங்கு என்.ஆனந்த் என்ற கேப்டன், மேஜர் சுதிர் பார்மர் என்ற 2 அதிகாரிகள், கூடாரத்தில் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது திடீர் என்று கூடாரத்தில் தீப்பிடித்துக் கொண்டது. படிப்படியாக கூடாரம், முழுமையாக எரிந்தது.

இதில் ராணுவ அதிகாரிகள் 2 பேரும் தீயில் சிக்கிக்கொண்டனர். உடனே அருகில் இருந்த ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கேப்டன் ஆனந்த உடல் எரிந்து விட்டது. அவரது கருகிய பிணத்தைதான் மீட்டனர். மேஜர் சுதிர் பார்மர் பலத்த தீக்காயத்துடன் மருத்துவமனயில் சேர்க்கப்பட்டார்.

கோவையைச் சேர்ந்தவர்..

இறந்து போன ஆனந்த் கோவையை சேர்ந்தவர். அவரது உடல், பரிசோதனைக்காக கபுர்தலா அரசு மருத்துவமனைக்கு+அனுப்பப்பட்டது.

இதுபற்றி ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், கொசுக்கடியில் இருந்த தப்ப கொசுவர்த்தியை பயன்படுத்தி இருக்கிறார்கள். பலத்த காற்று வீசியதால், கொசுவர்த்தியில் இருந்து கூடாரத்துக்கு தீ பரவி, விட்டது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X