ரிலையன்ஸ் மொபைலில் இனி ரூ.299க்கு வரையறையின்றி பேசலாம்!
மும்பை: மொபைல் போன் உலகில் புதிய புரட்சியாக ரூ 299 க்கு வரையறையின்றிப் பேசும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ரிலையன்ஸ் போன். இந்தத் திட்டம் ப்ரிபெய்ட் சந்தாதாரர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமூகத்தின் அனைத்து தரப்பினரும் மொபைல் போன்களை உபயோகிக்கும் வகையில் செல்போன்களை மலிவு விலையில் விற்றுச் சாதனை புரிந்தது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம்.
ஆனால் செல்போன் கட்டணங்கள் மற்றும் எஸ்எம்எஸ் கட்டண விதிப்பில் பெரும் மர்மமான முறையை இந்த நிறுவனம் பின்பற்றுவதாக புகார்கள் இருந்தன.
இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் பிரிபெய்டு வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட தொகையை செலுத்து அனைத்து உள்ளூர் அழைப்புகளுக்கும் 40 பைசா கட்டணத்தில் பேசிக்கொள்ளும் திட்டத்தை அறிவித்தது.
இப்போது, மேலும் ஒரு படி மேலே போய், ப்ரீபெய்ட் மொபைல் வைத்திருப்போர் மாதம் ரூ 299 செலுத்தி வரையறையற்ற உள்ளூர் அழைப்புகளை பேசலாம் என்று அறிவித்துள்ளது. எஸ்டிடியில் வரையறையற்ற அழைப்புகளைப் பேச ரூ 599 செலுத்த வேண்டும், மாதந்தோறும். வேறு எந்த நிபந்தனைகளும் இல்லை.
சிடிஎம்ஏ போன்களில் மட்டுமே இந்த திட்டம் இப்போது அறிமுகமாகியுள்ளது.