கலைக் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு நடத்த தமிழக அரசு தடை
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கலைக் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கையை நடத்த கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் பொறியியல், மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட்டுவிட்டது.
அதேசமயம், கலை, அறிவியல் கல்லூரிகளில் தொடக்கத்திலிருந்தே மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள 578 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளுக்கு கல்லூரிக் கல்வி இயக்குநரகம் ஒரு சர்க்குலர் அனுப்பவுள்ளது.
அதில் எந்தக் காரணத்தைக் கொண்டும் நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளக் கூடாது. அப்படி செய்வதாக தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்ப்படவுள்ளதாம்.