For Quick Alerts
For Daily Alerts
Just In
கூடலூர் பேராயருக்கு கொலை மிரட்டல் விடுத்த கோவை பேராயர் கைது
கோவை: கூடலூர் சி.எஸ்.ஐ. பேராயர் சுவிராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கோவை மண்டல பேராயர் மாணிக்கம் துரை கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பதிவான வழக்கில் கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி பேராயர் மாணிக்கம் துரைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பேராயர் ஆஜராகவில்லை.
இதையடுத்து அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து மாணிக்கம் துரையை போலீசார் இன்று கைது செய்தனர்.
மாணிக்கம் துரை மீது திருச்சபை பணம் ரூ. 3 கோடியை மோசடி செய்ததாக ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்று கைதாகாமல் தப்பி வந்தார்.
இந் நிலையில் சக பேராயருக்கு கொலை மிரட்டல் விடுத்து கைதகியுள்ளார்.
Comments
Story first published: Saturday, May 8, 2010, 12:18 [IST]