For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜா, மு.க.அழகிரி விவகாரம்- மே 30ல் திமுக உயர் நிலைக் கூட்டத்தில் விவாதம்

Google Oneindia Tamil News

சென்னை: மே 30ம்தேதி கூடும் திமுக உயர்நிலை செயல் திட்டக் கமிட்டிக் கூட்டத்தில், ஸ்பெக்ட்ரம் சர்ச்சையில் சிக்கியுள்ள அமைச்சர் ராஜா மற்றும் லோக்சபாவுக்கு தொடர்ந்து போகாமல்இருக்கும் மத்திய ரசாயண அமைச்சர் மு.க.அழகிரி ஆகியோர் விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

மிக மிக முக்கியமான விவகாரங்கள் குறித்து விவாதிக்க உயர் நிலை செயல் திட்டக் கூட்டத்தைக் கூட்டுவது திமுகவின் வழக்கம். அந்த வகையில் வருகிற 30ம் தேதி இக்கூட்டம் கூடும் என திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவித்திருப்பதும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இக்கூட்டத்தில் ராஜா மற்றும் மு.க.அழகிரி குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராஜாவுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. அவர் விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

அதேபோல மு.க.அழகிரி அமைச்சரானதிலிருந்து இதுவரை ஒருமுறை கூட லோக்சபாவிலோ அல்லது ராஜ்யசபாவிலோ உறுப்பினர்கள் கேட்ட ஒரு கேள்விக்கும் பதிலளிக்கவில்லை. இதுதொடர்பாக லோக்சபா சபாநாயகர் மீரா குமார் பலமுறை அழைத்தும் இதுவரை பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாக அழகிரி ஆர்வம் காட்டாமலேயே உள்ளார்.

இந்த இரு விவகாரங்களிலும் திமுகவிடம் மத்திய அரசு சில நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது. இது குறித்தும் திமுக உயர்நிலை கூட்டத்தில் பேசப்படக் கூடும் என்று தெரிகிறது.

இன்னொன்று, கனிமொழி விரைவில் மத்திய அமைச்சராக நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது. சமீபத்தில் முதல்வர் கருணாநிதி சென்றிருந்தபோது இது இறுதி செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இதனால் இக் கூட்டத்தில் கனிமொழி குறித்தும் பேசப்படலாம் எனத் தெரிகிறது. மேலும் மாநில அமைச்சரவையிலும் மாற்றம் வரலாம் என்கிறார்கள்.

இது தவிர ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்தும் இக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

பிர​த​மர் அலு​வ​ல​கத்​துக்கு தக​வல் தெரி​வித்​தார் அழ​கிரி:

இந் நிலையில் பிர​த​மர் அலு​வ​ல​கத்​துக்கு தக​வல் தெரிவித்த பின்னரே மத்​திய அமைச்சர் அழ​கிரி மாலத்​ தீ​வுக்கு
சென்​றார் என்​பது தெரி​ய​வந்​துள்​ளது.​

நா​டா​ளுமன்ற பட்​ஜெட் கூட்​டத்தொடர் நடந்​த​போது அவை​யில் அழ​கிரி இல்லை.​

இந் நிலை​யில் பிர​த​மர் அலு​வ​ல​கத்​துக்கு தக​வல் அனுப்​பிய பின்​னரே அவர் மாலத்​ தீ​வுக்​குப் புறப்​பட்​டுச் சென்​றுள்​ளார் என்​பது தக​வல் அறி​யும் உரி​மைச் சட்​டத்​தில் விண்​ணப்​பித்​த​தன் மூலம் தெரி​ய​வந்​துள்​ளது.​

ஏப்​ரல் 17ம் தேதி முதல் 22ம்ம் தேதி வரை மத்​திய அமைச்​சர் அழ​கிரி,​​ தனிப்​பட்ட முறை​யில் விடு​மு​றை​யில் மாலத் ​தீவு செல்​வ​தா​க​வும்,​ இது​தொ​டர்​பாக பிர​த​மர்
அலு​வ​ல​கத்​துக்கு முன்​கூட்​டியே தெரி​விக்​கப்​பட்டு விட்​டது என்​றும் தக​வல் அறி​யும் உரி​மைச் சட்​டத்​தின் மூலம்
விண்​ணப்​பித்​தற்கு ரசா​ய​னத்​துறை அமைச்​ச​கம் பதில் தெரி​வித்​துள்​ளது.​

மத்​திய அமைச்​சர்​கள் வெளி​நா​டு​க​ளுக்கு செல்​லும்​போது பிர​த​மர் அலு​வ​ல​கத்​தின் அனு​ம​தி​யைப் பெற​ வேண்​டும் என்ற விதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X