For Daily Alerts
Just In
லிபியாவில் பயங்கர விமான விபத்து-104 பேர் பலி, குழந்தை மட்டும் தப்பியது
எட்டு வயது சிறுவன் மட்டும் உயிர் தப்பியுள்ளான்.
லிபிய அரசுக்குச் சொந்தமான அஃப்ரிகியா ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் தென் ஆப்பிரிக்க தலைநகர் ஜோகானஸ்பர்க்கில் இருந்து லிபிய தலைநகர் திரிபோலிக்கு வந்தது.
அந் நாட்டு நேரப்படி காலை 6 மணிக்கு திரிபோலி விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விழுந்து நொறுங்கியது.
விமானிகள், சிப்பந்திகள் 11 பேர் உள்பட அதிலிருந்த 104 பேரும் பலியாயினர். நெதர்லாந்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளான்.
Comments
Story first published: Wednesday, May 12, 2010, 18:10 [IST]