For Quick Alerts
For Daily Alerts
Just In
என் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பிசிசிஐ காட்டும் ஆதாரங்கள் அனைத்தும் கற்பனையானவை – லலித் மோடி
தன் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து வாரியத்திற்கு மோடி சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில்,என் மீதான புகார்களை சுமத்தியுள்ள கிரிக்கெட் வாரியம், அதற்கான ஆதாரங்களாக கருதுவதை என்னிடம் காட்ட மறுப்பது ஏன். அப்படியானால் அவை உண்மையான ஆதாரங்கள் இல்லை, கற்பனையானவை, சட்டவிரோதமானவை என்று தெரிய வருகிறது.
வெறும் கற்பனை ஆதாரங்களை வைத்துக் கொண்டு என் மீது குற்றங்களை சுமத்தியுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம் என்று கூறியுள்ளார் மோடி.
Comments
Story first published: Thursday, May 13, 2010, 14:43 [IST]