For Daily Alerts
Just In
மதுரையில் பரபரப்பு – மீனாட்சி அம்மன் கோவிலை வட்டமிட்ட ஹெலிகாப்டர்
மதுரை: மதுரையில் உள்ள புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலை ஒரு ஹெலிகாப்டர் வட்டமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்ட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் இருப்பதால் கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகலில் ஒரு மர்ம ஹெலிகாப்டர் மீனாட்சி அம்மன் கோவிலை வட்டமிட்டபடி பறந்தது. ஆறு முறை இவ்வாறு வட்டமிட்ட அந்த ஹெலிகாப்டர் பின்னர் வடக்கு நோக்கி போய் விட்டது.
இதைப் பார்த்து பொதுமக்கள் பீதியடைந்தனர். உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் பறந்தது.
இந்த ஹெலிகாப்டர் எதற்காக கோவிலைச் சுற்றி வந்தது என்பது குறித்துத் தெரியவில்லை. மத்திய தொழிலக பாதுகாப்புப் படை ஹெலிகாப்டர் போலத் தெரிவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தைத் தொடர்பு கொண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments
Story first published: Saturday, May 15, 2010, 9:40 [IST]