குற்றாலம் மலையில் அதிரடி படையினர் நக்சல் வேட்டை
குற்றாலம்: குற்றாலம் மலைப்பகுதியில் நக்சலைட்கள் நடமாட்டம் இருக்கிறதா என அதிரடி படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அதிரடி படை வீரர்கள் மணிமுத்தாறு பட்டாலியன் எஸ்பி கருப்பசாமி உத்தரவின்படி ஆபரேசன டிஎஸ்பிக்கள் திருஞானசம்பந்தம், ராஜராஜன், இன்ஸ்பெக்டர் பாலசந்திரன் ஆலோசனையின்படி சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் அதிரடி படையினர் குற்றாலம் மலைபகுதியில் சிறப்பு முகாம் அமைத்துள்ளனர்.
குற்றாலம் மலைப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதா என அதிரடி வேட்டை நடத்தினர். செண்பகாதேவி அருவி, தேனருவி, வரையாற்றுமுட்டை பகுதிகளுக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மலைப்பகுதியில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டி கடுத்தும் கும்பல் நடமாட்டம் இருக்கிறதா, வனவிலங்குகளை வேட்டை.யாடும் கும்பல் நடமாட்டம் இருக்கிறதா என்று அதிரடி படையினர் தீவிர கண்காணிப்பு செய்து வருகின்றனர். தொடர்ந்து ஐந்து நாட்கள் இந்த வேட்டை நடக்கிறது.