ஜூன் 9 வரை நித்யானந்தாவை சென்னை-புதுச்சேரி போலீசார் கைது செய்ய தடை
அதேபோல்தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி, மற்றொரு மனுவையும் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி கர்ணன் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது நித்தியானந்தா சார்பில் வழக்கறிஞர்கள் வீர கதிரவன் மற்றும் டெய்சி ஆகியோர் வாதாடுகையில்,
தொலைக்காட்சியில் வெளியான செய்தியின் அடிப்படையில் நித்தியானந்தா மீது தமிழகம் முழுவதும் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
நடிகை குஷ்பு மற்றும் சுகாசினி ஆகியோர் மீது நடந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் ஒரு குற்றச்சாட்டுக்கு பல புகார்கள் கொடுக்கக் கூடாது. அவற்றை பதிவு செய்யவும் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் நித்தியானந்தா மீதான வழக்கு கர்நாடகத்துக்கு மாற்றப்பட்டுள்ளதால் மற்ற மனுக்கள் மீது போலீசார் கைது செய்ய நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து நீதிபதி கர்ணன், இது குறித்து ஜூன் 9ம் தேதிக்குள் சென்னை, புதுச்சேரி போலீசார் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்றும், அதுவரை நித்தியானந்தாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.