For Daily Alerts
Just In
நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவராக ருத்திரகுமாரன் தேர்வு
பல்வேறு அறிஞர்கள், சட்ட நிபுணர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட நாடு கடந்த தமிழீழ அரசு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூ்லம் கூட்டம் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் பிரமாண்டமாக நடந்தது.
தற்போது இந்த அரசின் தலைவராக ருத்திரகுமாரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசின் 2வது நாள் கூட்டத்தில்ர ருத்திரகுமாரன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிடடெல்பியாவில் 87 பிரதிநிதிகள் நேரடியாகக் கலந்து கொள்ள ஏனைய பிரதிநிதிகள் சுவிஸின் ஜெனிவா, லண்டன் மாநகரங்களில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கலந்து கொண்டனர்.
முன்னதாக தலைமைப் பதவிக்கு லண்டனைச் சேர்ந்த ஜெயானந்தமூர்த்தியும் போட்டியிட்டார். இருப்பினும் ருத்திரகுமாரனுக்கு ஆதரவு அதிகம் இருந்ததால் ஜெயானந்த மூர்த்தி போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.
Comments
Story first published: Wednesday, May 19, 2010, 11:45 [IST]