For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சோனியா அறக்கட்டளைக்கு போன அரசு நிதி ரூ. 5 கோடி!

By Chakra
Google Oneindia Tamil News

Sonia Gandhi
டெல்லி: நேரு மற்றும் ராஜாஜியின் புத்தகங்களை வெளியிட மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட ரூ. 5 கோடி சிறப்பு நிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தலைவராகக் கொண்ட ஒரு அறக்கட்டளைக்கு சட்ட விரோதமாகத் திருப்பி விடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அதைவிடக் கொடுமையாக இந்த அறக்கட்டளையில் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒரு அறங்காவலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய தணிக்கை அதிகாரியின் சிறப்பு ஆடிட்டிங்கில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளது.

மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள நேரு நினைவு மியூசியம் மற்றும் நூலகம் இந்த நிதியை ஜவஹர்லால் நேரு நினைவு நிதி அறக்கட்டளைக்கு அளித்துள்ளது. இந்த அறக்கட்டளை முழுக்க முழுக்க தனியாரால் நிர்வகிக்கப்படும் அமைப்பாகும். இதில் ராஜிவ் காந்தியின் நண்பரான சுமன் துபே செயலாளராக உள்ளார்.

இது முழுக்க முழுக்க சட்ட விரோதமான செயல் என்று தணிககை அதிகாரியின் 43 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ரூ. 5 கோடியை ஜவஹர்லால் நேரு நினைவு அறக்கட்டளை தனது கணக்கில் பிக்சட் டெபாசிட்டில் போட்டு வைத்து 'அடை காத்துள்ளது'. அதே நேரத்தில் ஆண்டுதோறும் ஆய்வாளர்களுக்கு நேரு நினைவு மியூசியம் வழங்க வேண்டிய உதவி நிதியை கடந்த 3 ஆண்டுகளாக வழங்கவே இல்லை. (அந்தப் பணத்தை தான் நேரு நினைவு நிதி அமைப்புக்கு தந்துவிட்டனர் போலும்).

மேலும் நேரு மியூசியத்தை நவீனமமாக்கும் பணிக்காக ஜெய்மாலா ஐயர், சந்தனா டெ ஆகிய இருவருக்கும் மீண்டும் மீண்டும் ரூ. 20 கோடி வரை பணம் தரப்பட்டுள்ளது.

செய்த வேலையையே இவர்கள் திரும்பத் திரும்ப செய்ததாக கணக்குக் காட்டியுள்ளனர. அதை ஏன் அவர்கள் திரும்பத் திரும்பச் செய்தனர். தற்கு ஏன் மீண்டும் மீண்டும் பணம் தரப்பட்டது என்பது தெரியவில்லை என்றும் தணிக்கை அதிகாரியின் அறிக்கை கேள்வி எழுப்பியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X