For Quick Alerts
For Daily Alerts
Just In
நாளை மறுதினம் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 26ம் தேதி வெளியாகின்றன.
கடந்த மார்ச் 23ம் தேதி பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கி நடந்து முடிந்தது. இதில் கிட்டத்தட்ட 9 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இவர்களில் எட்டரை லட்சம் பேர் நேரடியாக தேர்வு எழுதினர்.
இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு தற்போது தேர்வு முடிவுகள் தயார் நிலையில் உள்ளன.
இந்த முடிவுகள் நாளை மறுதினம் (மே 26ம் தேதி) வெளியாகின்றன.
பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை உங்கள் தட்ஸ்தமிழில் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Comments
Story first published: Monday, May 24, 2010, 16:11 [IST]