விமான விபத்து: 3 நாள் தேடலுக்குப் பின் 'டிஜிட்டல் பிளைட் டேட்டா ரெக்கார்டர்' மீட்பு!
முன்னதாக கருப்புப் பெட்டியின் ஒரு பாகமான காக்பிட்வாய்ஸ் ரெக்கார்டர் (சி.வி.ஆர்.) மட்டுமே கிடைத்தது. இதில் விமானியின் அறையில் நடக்கும் பேச்சுக்கள் பதிவாகியிருக்கும். விமானிகளிடையிலான உரையாடல், விமானிகளுக்கும் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் இதில் பதிவாகியிருக்கும்.
ஆனால், இன்னொரு பகுதி டிஜிட்டல் பிளைட் டேட்டா ரெக்கார்டர் (எப்.டி.ஆர்.) கிடைக்கவில்லை.
இதில் தான் விமானம் கிளம்பியது முதல் தரையிறங்கியது வரையிலான அத்தனை தொழில்நுப்ட விவகாரங்களும் பதிவாகும். விமானம் எந்த நொடியில் எந்த வேகத்தில் பறந்தது, எந்த உயரத்தில் பறந்தது, என்ஜின் உள்பட விமானத்தின் அனைத்துக் கருவிகளின் செயல்பாடுகள், அதில ஏற்பட்ட குறைபாடுகள் என விமானத்தின் அனைத்து விவரங்களும் பதிவாகும்.
இது கிடைத்தால் தான் விபத்துக்கான காரணத்தை முழுமையாக ஆராய முடியும் என்ற நிலையில் தேடல் இரவு பகலாகத் தொடர்ந்தது.
இந் நிலையில் இன்று காலை 10 மணிக்கு இந்தப் பாகம் மீட்கப்பட்டது. இது மிக பலத்த சேதமடைந்துள்ளது. ஆனாலும் இதில் உள்ள 'டேப்'கள் பத்திரமாக உள்ளதால் முழு விவரங்களையும் சேகரித்துவிட முடியும் என விமானப் போக்குவரத்துத்துறை டைரக்டர் ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து இது சிறப்பு விமானத்தில் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள விமானத்துறையின் ஆய்வகத்தில் இதில் உள்ள விவரங்கள் ஆராயப்படும். இதிலிருந்து விவரங்கள் சேகரிக்க பல வாரங்கள் ஆகும்.
இதை முழுமையாக ஆராய தேவைப்பாட்டால் அமெரிக்காவுக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.