For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்-தட்ஸ்தமிழில் காணலாம்

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) வெளியாகின்றன. தேர்வு முடிவுகளை, மதிப்பெண் பட்டியலுடன் உடனுக்குடன் தட்ஸ்தமிழில் காணலாம்.

பத்தாம் வகுப்பு, ஓ.எஸ்.எல்.சி தேர்வுகள் கடந்த மார்ச் 23ம் தேதி தொடங்கி ஏப்ரல் 7ம் தேதி முடிவடைந்தன. மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ-இந்தியன் தேர்வுகள் ஏப்ரல் 9ம் தேதி முடிவடைந்தன.

பத்தாம் வகுப்பு தேர்வை 6,493 பள்ளிகளைச் சேர்ந்த 8,56,966 மாணவ, மாணவிகள் எழுதினர்.

மெட்ரிகுலேஷன் தேர்வை 3,138 பள்ளிகளைச் சேர்ந்த 1,30,020 மாணவ, மாணவியர் எழுதினர். ஆங்கிலோ-இந்தியன் தேர்வை 41 பள்ளிகளைச் சேர்ந்த 4,492 பேரும், ஓ.எஸ்.எல்.சி. தேர்வை 1,593 பேரும் எழுதினர்.

இந் நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (26ம் தேதி) காலை 10.00 மணிக்கு வெளியாகின்றன.

தேர்வு முடிவுகளை உடனுக்குடன் காண தட்ஸ்தமிழ் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. http://results.oneindia.in/ பக்கத்தில் முடிவுளைக் காணலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X