For Quick Alerts
For Daily Alerts
Just In
'சர்ச்சைக்குரிய' வன்னியரசு மாற்றம்-திருமாவளவன்
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய செயலாளராக இருந்த வன்னியரசு அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அக்கட்சியின் சர்ச்சைக்குரிய நிர்வாகிகளுள் ஒருவராக கருதப்பட்டு வந்த அவரை கட்சியின் செய்தித் தொடர்பாளராக நியமித்துள்ளார் திருமாவளவன்.
செய்தித் தொடர்பாளராக இருந்த வழக்கறிஞர் ஆர்வலன் தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையின் மாநில துணை செயலாளராக இருந்த மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கட்சி தலைவரின் தனி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கண்ட தகவலை கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
Comments
Story first published: Tuesday, May 25, 2010, 13:49 [IST]