For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நக்சல் தாக்குதலில் பலியான தமிழக வீரர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்- கருணாநிதி

By Chakra
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: சட்டீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதலில் பலியான நெல்லை ரிசர்வ் படை வீரர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் காவல் படையின் தலைமைக் காவலர் எம். சுப்பிரமணியன், சட்டீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் 8.5.2010 அன்று நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் வீர மரணம் அடைந்தார்.

மறைந்த தலைமைக் காவலர் எம். சுப்பிரமணியத்தின் தியாகத்தைப் போற்றி, அவரது குடும்பத்தாருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X