எம்.பி.பி.எஸ், பி.இ விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்: இரவு 9 மணி வரை பி.இ. விண்ணப்பம் தரலாம்
சென்னை: மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பிக்க இன்றே (மே 31) கடைசி நாளாகும்.
இந் நிலையில் பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க இன்று (திங்கட்கிழமை) கடைசிநாள் என்பதால, இரவு ஒன்பது மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் கடந்த 3ம் தேதி முதல் 58 மையங்களில் கொடுக்கப்பட்டுவந்தன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர இன்று (திங்கட்கிழமை) கடைசி நாளாகும்.
இன்று (திங்கட்கிழமை) தமிழ்நாட்டின் எந்த பகுதியி்ல் இருந்து விண்ணப்பம் அனுப்ப்பட்டாலும் அதை அண்ணா பல்கலைக்கழகம் ஏற்றுக் கொள்ளும். ஆனால் இன்றைய தேதியிட்ட தபால் முத்திரை அந்த தபாலில் இருக்க வேண்டும்.
அதேபோல் இன்று இரவு 9 மணி வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரடியாக விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை வரை 1.15 லட்சம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர்ந்தன. கடைசி நாளான இன்று நிறைய விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பூர்த்தி செய்த பி.இ. விண்ணப்பங்களைப் பெற அண்ணா பல்கலைக்கழகத்தில் 16 கவுன்டர்கள் செயல்பட்டு வந்தன. கடைசி நாளான இன்று மேலும் 4 கூடுதல் சிறப்புக் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
கட்-ஆப் மார்க் ஒருவருக்கு அதிகமானவர்களுக்கு ஒரே அளவில் இருந்தால் யாருக்கு இடம் கொடுப்பது என்பதை நிர்ணயிக்க ரேண்டம் எண் ஜுன் மாதம் 15ம் தேதி வழங்கப்படும்.
பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் எடுத்த கணிதம், வேதியியல், இயற்பியல் ஆகிய மதிப்பெண்கள் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஜுன் 18ம் தேதி வெளியிடப்படும்.
பின்னர் ஜுன் 26ம் தேதி கவுன்சிலிங் தொடங்குகிறது. கவுன்சிலிங் ஜுலை 25ம் தேதி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நிறைய மாணவர்கள் விண்ணப்பித்து வருவதால், கவுன்சிலிங் நீடிக்கப்படும் என்று தெரிகிறது.
கவுன்சிலிங் வழக்கம் போல சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும்.