For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைச்சர் ராசாவுக்கு எதிராக ஆதாரம் வெளியிட்ட மார்க். கம்யூ!

By Chakra
Google Oneindia Tamil News

டெல்லி: செல்போன் நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் விட்டதில் முறைகேடு நடந்தது தொடர்பான குற்றச்சாட்டில், அமைச்சர் ராசாவுக்கு எதிராக, விளக்கம் கேட்டு தணிக்கை அதிகாரி அனுப்பிய நோட்டீஸின் நகலை ஆதாரமாக வெளியிட்டார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி வெளியிட்டார்.

இது குறித்து யெச்சூரி கூறுகையில், இந்த ஏலத்தில் நடந்த முறைகேட்டால் அரசுக்கு ரூ.1.9 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

2ஜி ஏல நடைமுறைகளில் நிலவிய முரண்பாடு தொடர்பாக தொலைத் தொடர்புத் துறைக்கு, மூத்த தணிக்கை அதிகாரி ராஜேந்திர குமார் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

இதன் நகலைத் தான் இப்போது தான் வெளியிட்டேன். இது தொடர்பான விசாரணை முடியும் வரையிலாவது அமைச்சர் ராசாவை அமைச்சரவையில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் விலக்கி வைக்க வேண்டும் என்றார் யெச்சூரி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X