அனுமதி தர பிரதமர் அலுவலகம் இழுத்தடிப்பு - ராசாவின் எஸ்தோனிய பயணம் ரத்து
ஜூன் 7 ம் தேதி முதல் 13 ம் தேதி வரை எஸ்தோனியா நாட்டில் நடைபெறவுள்ள மின்னணு ஆட்சிமுறை குறித்த கருத்தரங்கில் பங்கேற்க அமைச்சர் ராசா தலைமையில் 4 எம்.பி.க்கள், தொலைதொடர்புத்துறையைச் சேர்ந்த 15 அதிகாரிகள் அடங்கிய குழு செல்லவிருந்தது.
வெளிநாடு செல்ல அனுமதி அளிக்குமாறு பிரதமர் அலுவலகம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு தொலைதொடர்புத்துறை அமைச்சரின் அலுவலகம் மூலமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் பயணத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துவிட்டது. ஆனால் பிரதமர் அலுவலகத்தின் அனுமதியை பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.
அனுமதி கிடைக்காமல் பிரதமர் அலுவலகம் இழுத்தடித்து வந்தது. இதையடுத்து தனது பயணத்தையே ராசா ரத்து செய்து விட்டாராம்.
ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஊழல்தொடர்பாக மத்திய அரசை பாஜக உள்ளிட்ட கட்சிள் குடைந்து கொண்டிருக்கின்றன. மேலும், சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ராசாவக்கு எதிரான ஆதாரத்தையும் வெளியிட்டது
நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் ராசாவின் பயணத்திற்கு அனுமதி தராமல் பிரதமர் அலுவலகம் இழுத்தடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.