ஹெட்லியை விசாரிக்க தொடங்கியது இந்திய என்.ஐ.ஏ குழு
இந்தியாவில் ஹெட்லியின் செயல்பாடுகள், இந்தியாவில் செயல்பட்டு வரும் தீவிரவாத ரகசியக் குழுக்கள், மும்பைத் தீவிரவாத தாக்குதலில் ஹெட்லியின் பங்கு உள்ளிட்டவை குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி குழுவினர் விசாரிக்கவுள்ளனர்.
ஹெட்லியின் வக்கீல் ஜான் தீயிஸ், எப்பிஐ அதிகாரி ஆகியோரின் முன்னிலையில், ஹெட்லியை விசாரித்து வருகிறது தேசதிய புலனாய்வுக் குழு. இந்த விசாரணை எத்தனை மணி நேரம் நடக்கும், எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது தெரியவில்லை. இருப்பினும் விசாரணை முடிவடைந்த பின்னர் தேசிய புலனாய்வு ஏஜென்சியும், எப்பிஐயும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிடலாம் என்றுதெரிகிறது.
இந்திய விசாரணைக் குழுவில் ஐபிஎஸ் அதிகாரியான ஐஜி லோக்நாத் பெஹரா, எஸ்.பிக்கள் சாஜித் பரீத் ஷாபூ, ஸ்வயம் பிரகாஷ் பானி, ஒரு அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அமெரிக்காவுக்கு இந்தியா மிகவும் முக்கியம் என்று அதிபர் பாரக் ஒபாமா கூறிய சில மணி நேரங்களில் ஹெட்லியை விசாரிக்க தேசிய புலனாய்வு விசாரணையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.