For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆசிய கோப்பை - கொழும்பு சென்றது இந்திய கிரிக்கெட் அணி

Google Oneindia Tamil News

சென்னை: ஜூன் 15-ம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ள 15 பேர் கொண்ட இந்திய அணி, கேப்டன் தோனி தலைமையில் இன்று கொழும்பு சென்றது.

சென்னையில் 2 நாள் பயிற்சியை முடித்துக் கொண்ட இந்திய அணி இன்று காலை இலங்கை தலைநகருக்குப் புறப்பட்டு சென்றது.

தற்போது ஜிம்பாபேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட 7 வீரர்கள் ட்வென்டி20 ஆட்டத்தை முடித்துக்கொண்டு கொழும்புவுக்கு இன்று நேரடியாக செல்ல இருக்கிறார்கள்.

ரோஹித் ஷர்மா, விராத் கோலி, ரவீந்திர ஜடேஜா, அஷ்வின், அஷோக் தின்டா, பிரக்யான் ஓஜா ஆகியோர் தான் தற்போது ஜிம்பாபேயில் உள்ள மற்ற வீரர்கள்.

ஜூன் 16-ம் தேதி நடக்கும் முதல் போட்டியில் பங்களாதேஷை சந்திக்கும் இந்தியா, ஜூன் 16-ம் தேதி அன்று பாகிஸ்தானை சந்திக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X