For Daily Alerts
Just In
பங்குச் சந்தை முன்னேற்றம் எதிரொலி-ரூபாய் மதிப்பும் உயர்ந்தது
மும்பை: பாம்பே பங்குச் சந்தையில் இன்று ஏற்பட்ட உயர்வு காரணமாக ரூபாய் மதிப்பும் உயர்ந்துள்ளது.
இன்று காலை பாம்பே பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கியதும் ரூபாயின் மதிப்பு, 26 காசுகள் உயர்ந்து, ஒரு டாலருக்கு ரூ. 46.57 ஆக இருந்தது.
இது வெள்ளிக்கிழமை நிலவரப்படி ரூ. 46.83 ஆக இருந்தது.
ரூபாய் மதிப்பு உயர்ந்ததற்கு முக்கியக் காரணம், வெளிநாட்டு நிதி மூலம் புதிதாக பங்குச் சந்தை முதலீடுகள் செய்யப்பட்டதே காரணம் என்று அன்னியச் செல்வாணி சந்தை முகவர்கள் தெரிவித்தனர்.
Comments
Story first published: Monday, June 14, 2010, 11:09 [IST]