For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வழக்கு மொழியாக தமிழை அறிவிக்கக் கோரி தமிழகத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக தமிழை அறிவிக்கக் கோரி தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தலைநகர் சென்னையிலும், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் அதி்முக முன்னாள் அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டணிக் கட்சிகளான மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொண்டர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறிவிக்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது வலியுறுத்தப்பட்டது.

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான வக்கீல்களும் கலந்து கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X