For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செம்மொழி மாநாடு-கோவை சென்றார் கருணாநிதி-உற்சாக வரவேற்பு

Google Oneindia Tamil News

Karunanidhi
கோவை : கோவையில் நாளை மறு நாள் தொடங்கவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி இன்று பிற்பகல் கோவை சென்றடைந்தார்.அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவையில் நாளை மறு நாள் பிரமாண்டமான பேரணியுடன் தொடங்குகிறது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. இதற்காக முதல்வர் கருணாநிதி இன்றே கோவை சென்று விட்டார். இன்றுமுற்பகல் சென்னையிலிருந்து விமானம் மூலம் அவர் கோவை புறப்பட்டுச் சென்றார்.

கோவை விமான நிலையத்தை வந்தடைந்த அவருக்கு மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெரும் திரளான திமுகவினர் திரண்டு வந்து முதல்வரை வரவேற்றனர்.

வரவேற்புக்குப் பின்னர் முதல்வர் கருணாநிதி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

ஓய்வுக்குப் பின்னர் மாநாட்டு ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிடவுள்ளார் முதல்வர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X