For Daily Alerts
Just In
தென்காசி அருகே பிறந்த குழந்தைக்கு 'செம்மொழி' பெயர் சூட்டல்
தென்காசி அருகேயுள்ள கீழப்பாவூரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி மோகனவேல். இவரது மனைவி சுகுணா தங்கம் தம்பதியினருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது.இந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கணவன்-மனைவி இருவரும் யோசிக்கவே அவர்களுக்கு தோன்றியது செம்மொழி என்ற பெயர். அப்பெயரை இருகுடும்பமும் ஏற்றுக் கொண்டு பெண் குழந்தைக்கு செம்மொழி என்று பெயர் வைத்து குலசேகரப்பட்டி ஊராட்சி மன்ற பிறப்பு சான்றிதழிலும் அப்பெயரை பதிவு செய்து சான்றும் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து அறிந்த திமுகவினர் அக்குடும்பத்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்து குழந்தைக்கு தங்க மோதிரத்தை அணிவித்தனர். தேன்மொழி, கனிமொழி என்ற பெயரை போல் செம்மொழி என்ற பெயரும் இனி பிரபலமாகும் என எதிர்பார்க்கலாம்.
Comments
Story first published: Thursday, June 24, 2010, 11:43 [IST]