தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், சிறப்பு மலரை வெளியிட்டு அவர் பேசுகையில்,
இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு சிறந்த எழுத்தாளரும், கவிஞரும், பேச்சாளருமான கலைஞர் கருணாநிதி தலைமை வகிப்பதும் மிகவும் பொருத்தமானதாகும். டாக்டர் கலைஞர்தான் தமிழ்; தமிழ்தான் டாக்டர் கலைஞர். கலைஞரையும், தமிழையும் பிரிக்க முடியாது. இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினை நடத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்.
தமிழ் ஒரு அழகிய மொழி. சிறந்த தமிழாசிரியரான நன்னனிடம் நான் தமிழ் கற்றுக் கொண்டேன். உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஊடகமாக மொழி விளங்குகிறது. அது சிந்தையின் வாகனமாகவும் திகழ்கிறது. அது சிந்தனை, உணர்ச்சி ஆகியவற்றின் வெளிப்பாடாக மட்டுமின்றி, சமூக அடையாளமாகவும் விளங்குகிறது.
சிந்தை வளம், மொழி அழகு, போராட்டமான வளர்ச்சி மற்றும் நல்லவற்றை உறிஞ்சும் தன்மை ஆகியவற்றாலேயே தமிழ்மொழி, உயர் தனிச் செம்மொழியாக விளங்குகிறது. இலங்கை மற்றும் மலேசியா நாடுகளின் அதிகாரப்பூர்வமான மொழியாகவும் தமிழ் திகழ்கிறது. உலகில் 55க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழ் பேசப்படுவதாகவும் அறிகிறேன்.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க முதல்வர் கருணாநிதி மேற்கொண்ட முயற்சிகள் மிகவும் பாராட்டுக்குரியவை.
பிறப்பால் எல்லோரும் சமம் என்பதை விளக்கும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்னும் கருத்தை மையமாகக் கொண்டு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான இலச்சினையை டாக்டர் கலைஞர் உருவாக்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
திருவள்ளுவரின் கருத்துக்கள் எல்லா காலங்களுக்கும் பொருத்தமானவையாகும். மகாவீரர், குருநானக் மற்றும் கபீர்தாஸ் ஆகியோரின் போதனைகளும், திருவள்ளுவரின் கருத்துக்களும் ஒத்திருப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
திருக்குறள், தமிழ்மொழியின் கிரீடமாகும். சங்க இலக்கிய பாடல்கள் மற்றும் கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம் ஆகியவை, தமிழ் மொழியின் அணிகலன்களாகும். தமிழ் மொழி, செம்மொழி அந்தஸ்து தகுதிக்கு உரித்தானதே என்பதை விளக்குவதாக அவை அமைந்துள்ளன.
இந்த மாநாட்டில், சிறந்த மொழியாம் தமிழ் மொழியின் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் பற்றி விரிவாக விரிவாதிக்கப்படும் என்று உறுதியாக நம்புகிறேன் என்றார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications