தெற்காசியாவிலேயே இந்தியாவில் ஹெராயின் அதிகம்: ஐ.நா
நியூயார்க்: தெற்காசியாவிலேயே அதிகமாக ஹெராயின் பயன்படுத்துவது இந்தியா தான். மேலும், ஹெராயின் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருளான ஓபியம் பாப்பியையும் இந்தியா தானே உற்பத்தி செய்கிறது என்று போதை மற்றும் குற்றங்களுக்கான ஐ.நா. அலுவலகம் தெர்வித்துள்ளது.
ஹெராயினாக மாற்றப்படாத ஓபியத்தில் மூன்றில் இரண்டு பங்கை ஈரான் (42%), ஆப்கானிஸ்தான்(7%), பாகிஸ்தான்(7%), இந்தியா (6%), ரஷ்யா(5%) ஆகிய நாடுகள் பயன்படுத்துகின்றன.
2008-ம் ஆண்டில் இந்தியா 17 மெட்ரிக் டன் ஹெராயின் பயன்படுத்தியுள்ளது. இந்த ஆண்டிற்கான பயன்பாடு 65-70 மெட்ரிக் டன் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் பயன்படுத்தும் ஓபியம் ஆப்கானிஸ்தானில் இருந்து வருவதாக தெரியவில்லை. ஆப்கானிஸ்தான் தான் ஓபியத்தை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
2008-ம் ஆண்டில், 2,700 மெட்ரிக் டன் ஆப்கானிஸ்தான் ஓபியம் 380 மெட்ரிக் டன் ஹெராயினாக மாற்றப்பட்டு உலக மார்க்கெட்டில் விநியோகிக்கப்பட்டுள்ளது.