பணவீக்கம் மேலும் 1 சதவீதம் உயர்கிறது!
மீட்சிப் பாதைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இது சந்தோஷமான செய்தியில்லை.
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள க்ரைஸில் நிறுவன தலைமை பொருளியல் அறிஞர் டிகே ஜோஷி, "இது நிச்சயம் மோசமான விளைவுகளைத் தோற்றுவிக்கும். பணவீக்கத்தில் பெரும் தாக்கத்தை உண்டாக்கும்" என்றார்.
சிட்டி குழுமம் இதுகுறித்து கூறுகையி்ல், "இந்த விலை உயர்வால் குறைந்தபட்சம் 1 சதவீதம் அளவு பணவீக்கம் அதிகரிப்பது நிச்சயம்" என்று கூறியுள்ளது.
ஆண்டு பணவீக்கம் தற்போது 10 சதவீதம் உள்ளளது. இந்த வாரம் அது 11 சதவீதமாக அதிகரிக்கிறது. இதனை கட்டுக்குள் வைக்க, அனைத்து வட்டி வீதங்களையும் உயர்த்த வேண்டிய கட்டாயம் ரிசர்வ் வங்கிக்கு ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் அரசை அழுத்தி வந்த மானிய சுமை குறைந்திருப்பதையும் நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.