For Daily Alerts
Just In
ஐசிசி தலைவராக பொறுப்பேற்றார் சரத் பவார்
டெல்லி: இந்திய கிரிக்கெட்டின் முக்கியப் புள்ளியான சரத் பவார், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஐசிசி தலைவராக பதவியேற்கும் 2வது இந்தியர் பவார். இதற்கு முன்பு ஜக்மோகன் டால்மியா இப்பொறுப்பில் இருந்துள்ளார்.
இதுகுறித்து ஐசிசி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவரான சரத் பவார், ஐசிசி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஐசிசியின் வருடாந்திர மாநாட்டில் தற்போதைய தலைவர் டேவிட் மார்கனிடமிருந்து பொறுப்பை அவர் பெற்றுக் கொண்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சராக உள்ள பவார், ஐசிசி தலைவராக 2 ஆண்டுகள் செயல்படுவார்.
கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐசிசியின் துணைத் தலைவராக இருந்தார் பவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Thursday, July 1, 2010, 16:08 [IST]