For Daily Alerts
Just In
கணவரைக் கைவிட்டு விட்டு காதலனுடன் பாமக எம்.எல்.ஏவின் தம்பி மகள் ஓட்டம்
வேலூர்: திருப்பத்தூர் தொகுதி பாமக எம்.எல்.ஏ. டி.கே.ராஜாவின் தம்பி பூபதியின் மகள் தனது கணவரை விட்டு விட்டு காதலனுடன் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பூபதி திருப்பத்தூர் நகர பா.ம.க. செயலாளராக உள்ளார். இவரது மகள் ரம்யா(18). இவர் ஒரு கார் டிரைவரை காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த ரம்யாவின் குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி பழனி என்பவருக்கு கட்டி வைத்து விட்டனர்.
இந்நிலையில் நேற்று மாலை முதல் ரம்யாவை காணவில்லை. அவரை காதலரான சரவணன் என்பவர் காரில் கூட்டிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. ரம்யாவே விருப்பப்பட்டுத்தான் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
தனது மகளை சரவணன் கடத்திச் சென்று விட்டதாக போலீஸில் பூபதி புகார் கொடுத்துள்ளார்.
Comments
Story first published: Friday, July 2, 2010, 11:37 [IST]