பொது வேலைநிறுத்தம் தேவையற்றது - கே.வி. தங்கபாலு கருத்து !
மதுரை: எதிர்க்கட்சிகள் நடத்தும் பொது வேலை நிறுத்தம் தேவையற்ற செயல் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி. தங்கபாலு கருத்து தெரவித்துள்ளார்.
இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
பாரத் பந்த் என்று கூறி எதிர்க்கட்சிகள் நடத்த உள்ள பொது வேலைநிறுத்தம் தேவையற்ற செயலாகும்.
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மிகச்சிறந்த செயல் திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலையில், இந்த வேலைநிறுத்தத்தை பொதுமக்கள் ஆதரிக்கக் கூடாது. ஆதரிக்கவும் மாட்டார்கள் என்று நம்புகின்றோம்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் டீ தொழிற்சாலைக் கட்டடம் கட்டப்பட்ட விவகாரத்தில், ஆட்சித் தலைவருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையே உள்ள பிரச்னையாகக் கருதாமல், சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும்.
நெய்வேலி சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு, தமிழக காங்கிரசம் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய சுரங்கத் துறை அமைச்சரிடமும் பிரச்சனையை சுமுகமாக முடிக்க வலியுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் கருணாநிதியும் உரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
மத்தியில் காங்கிரசம், மாநிலத்தில் திமுகவும் இணைந்து நல்லாட்சி வழங்கி வருகிறோம். இக் கூட்டணி தொடரும். அதில், எவ்வித மாற்றமும் இல்லை என்றார்.