For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்ஆர்ஐகளே.. சொந்த ஊருக்கு நல்லது செய்ய விருப்பமா?

By Chakra
Google Oneindia Tamil News

Indian Flag
டெல்லி: தங்களது சொந்த ஊரில் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த நிதியுதவி செய்யும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (என்ஆர்ஐ) சிறப்பு வரிச் சலுகை அளிக்கப்படவுள்ளது.

இந்தத் திட்டங்களுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் நிதிக்கு முழு வரிச் சலுகை அளிக்கப்படும் என்று வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அறிவித்துள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் இந்தப் பணத்தைக் கொண்டு அவர்களது சொந்த ஊரில் அவர்களின் விருப்பத்திற்கேற்ப பள்ளி, மருத்துவமனை கட்டப்படும் அல்லது வேறு ஏதாவது மக்கள் நலத திட்டம் அமல்படுத்தப்படும்.

வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து நிதியைப் பெற்று இது போன்ற திட்டங்களை அமலாக்க இந்தியா வளர்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

முதல்கட்டமாக அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடமிருந்து நிதியைப் பெறும் வகையில் அமெரிக்காவில் இந்த அறக்கட்டளையை மத்திய அரசு பதிவு செய்துள்ளது.

அடுத்ததாக பிரிட்டன் மற்றும் வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடம் இருந்தும் நிதியைப் பெறும் வகையில் அங்கும் இந்த அறக்கட்டளை தொடங்கப்படவுள்ளது.

இந்தத் திட்டம் அடுத்த 3 மாதங்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X