For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிங்கப்பூரில் கால் பதிக்க எல்ஐசி திட்டம்

By Chakra
Google Oneindia Tamil News

டெல்லி: பொதுத் துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. இந்த நிதியாண்டில் 10,000 ஊழியர்களை புதிதாக பணியில் அமர்த்த உள்ளது.

இது குறித்து எல்.ஐ.சி நிர்வாக இயகக்குநர் ஏ.கே. தாஸ் குப்தா கூறுகையி்ல், சென்ற ஆண்டு எல்.ஐ.சியில் 10,000 பேர் பணியமர்த்தப்பட்டனர். இந்த ஆண்டும் அதே எண்ணிக்கையிலான புதிய ஊழியர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.

இதில் 5,000 பேர் டெவலப்மென்ட் ஆபிசர்களாக இருப்பர். தற்போது எல்.ஐ.சியில் 1.15 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் என்றார்.

இந் நிலையில் எல்.ஐ.சி. தனது சேவையை சிங்கப்பூரிலும் துவக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்த நாட்டின் அனுமதிக்காக எல்ஐசி காத்துக் கொண்டுள்ளது.உள்ளது.

ஏற்கனவே இங்கிலாந்து, மொரீஷியஸ், கென்யா, இலங்கை, செளதி அரேபியா, குவைத், துபாய், அபுதாபி, ஓமன், கத்தார் ஆகிய நாடுகளில் எல்.ஐ.சிக்கு கிளைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X