கேரளா-விபசார அழகியுடன் உல்லாசம்-கையும் களவுமாக சிக்கிய உதவி ஆணையர்
திருவனந்தபுரம்: கேரளாவின் எர்ணாகுளத்தில் விபச்சார விடுதியில் அழகியுடன் உல்லாசமாக இருந்த உதவி ஆணையரை போலீஸார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள முண்டம்வேலி பகுதியில் ரோசிலி என்பவர் வீட்டில் விபசாரம் நடப்பதாக பள்ளுருத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சஜீவன் தலைமையிலான போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள ஒரு அறையில் இளம்பெண்ணுடன் இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையின் போது கைதானவர் கோட்டயத்தில் உள்ள தேவலோகம் பகுதியை சேர்ந்த மேத்யூஸ் ஜான் (வயது 46) என்பது தெரிய வந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் தான் கோழிக்கோடு சரக கலால் துறை உதவி கமிஷனராம்.
அந்த இளம் பெண் எர்ணாகுளத்தை சேர்ந்த ஜீனா என்பது தெரிய வந்தது. இவர்களை தவிர இளம் பெண்ணை வைத்து விபசாரம் நடத்திய வீட்டு உரிமையாளர் ரோசிலியையும் போலீசார் கைது செய்தனர்.