For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னையில் நடைபெற இருந்த பா.ம.க பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைப்பு!
சென்னை: சென்னையில் நடைபெற இருந்த பா.ம.க பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பா.ம.க. சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் ஜூலை 7-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கட்சித் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கை:
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்த கூட்டம் 9-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த பொதுக்குழு கூட்டம் சென்னை, சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா கலையரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
இதில் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பல்வேறு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Wednesday, July 7, 2010, 12:42 [IST]