For Daily Alerts
Just In
காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு அமல்-ராணுவம் தீவிர ரோந்து
கலவரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று பல பகுதிகளில் ஊரடங்கு விரிவுபடுத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த காஷ்மீரும் ஊரடங்கின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
தலைநகர் ஸ்ரீநகரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ராணுவ கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
சோபோர் நகரம், பாரமுல்லாவின் பழைய பகுதிகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீநகரிலும் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அதேசமயம், சோபியான், ஹந்த்வாரா, கந்தர்பால், பட்காம், பாரமுல்லா நகர் ஆகிய இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை.
ஸ்ரீநகரின் பட்மலூ பகுதியில் ஒரு கும்பல் போராட்டத்தில் குதிக்க முயன்றது. இருப்பினும் பாதுகாப்புப் படையினர் அவர்களை அமைதியானமுறையில் கலைந்து போகச் செய்தனர்.
Comments
Story first published: Thursday, July 8, 2010, 14:43 [IST]