தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது-சுகாதாரத் துறை செயலர்
சென்னை: தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவல் ஆரம்ப கட்டத்திலேயே தடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாலர் வி.கே.சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று அவர் பேசுகையில், கேரளாவில் பன்றிக் காய்ச்சலின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் அதை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகளிலும் அது தீவிரமாக பரவும்அபாயம் உள்ளது.
இருப்பினும் இதை ஆரம்ப நிலையிலேயே நாம் வெற்றிரகரமாக தடுத்துள்ளோம். எல்லைப் பகுதிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 21 பேருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டது. இருப்பினும், கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 16 பேரும் நல்ல முறையில் சரியாகி, சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
பன்றிக் காய்ச்சலால் தமிழகத்தில் மிகப் பெரிய பாதிப்பு இல்லை. உயிரிழப்பும் ஏற்படவில்லை.
வைரஸ் காய்ச்சல் பரவலைத் தடுக்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.