For Quick Alerts
For Daily Alerts
Just In
இரும்பு விலையை உயர்த்த டாடா ஸ்டீல் திட்டம்
இதுகுறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.முத்துராமன் கூறுகையில், இரும்பு உற்பத்திக்கான செலவுள் அதிகரித்துள்ளன. எனவே அதை வாடிக்கையாளர்கள் மீதுசுமத்த வேண்டிய நிர்ப்பந்தம் அதிகரித்துள்ளது.
உலக அளவில் மூலப் பொருட்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. எனவே இதைசமாளிக்க விலையை உயர்த்த வேண்டியே ஆக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உள்ளூரிலும், சர்வதேச சந்தையிலும் இரும்புக்கு நல்லகிராக்கி உள்ளது. இது அதிகரித்துக் கொண்டேவருகிறது. அதேசமயம், சீனாவிலிருந்து விலை குறைந்த இரும்பு பெருமளவில் இறக்குமதி செய்யப்படுவதால் நமக்கு அது சவாலாக மாறியுள்ளது என்றார் முத்துராமன்.
விலை உயர்வு எவ்வளவு இருக்கும் என்பதை முத்துராமன் தெரிவிக்கவில்லை.
Comments
Story first published: Friday, July 9, 2010, 15:30 [IST]