For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செம்மொழி மாநாட்டில் அறிவித்தப்படி தமிழில் படித்த வாலிபருக்கு வேலை-கருணாநிதி வழங்கினார்

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அறிவிக்கப்பட்டதற்கு இணங்க தமிழில் படித்த மாணவர் ஒருவருக்கு அரசு பணி நியமன ஆணையை முதல்வர் கருணாநிதி இன்று வழங்கினார்.

செம்மொழி மாநாட்டின் நிறைவுரையாற்றிய கருணாநிதி, தமிழ் மொழி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.அதில் தமிழில் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

அந்த அறிவிப்புக்கு இணங்க சென்னை சாந்தோம் மாவட்ட தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட்டவர்களில் தொடக்கக் கல்வி முதல் தமிழிலேயே படித்த பொ. பேதுரு என்பவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அலுவலகத்தில் ஜெராக்ஸ் ஆபரேட்டர் பணி வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பணி நியமன ஆணையை முதல்வர் கருணாநிதி இன்று பேதுருவிடம் வழங்கினார்.

செம்மொழி நாட்டில் அறிவிக்கப்பட்டதற்கிணங்க தமிழிலேயே படித்து முதன் முதலாக அரசு பணியில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் பெறுபவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X