உலகின் தலைசிறந்த 15 ஹோட்டல்களில் 4 ஓபராய் ஹோட்டல்கள்
டெல்லி: உலகின் சிறந்த 15 ஹோட்டல்களில் ஓபராய் குரூப் நடத்தும் 4 ஹோட்டல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.இதில் குறிப்பாக ரன்தாம்பூரில் உள்ள தி ஓபராய் வன்யவிலாஸ் ஹோட்டல் தான் இந்த ஆண்டிற்கான சிறந்த ஹோட்டல்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த தகவலை டராவல் பிளஸ் லீசர் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
ரன்தாம்பூரில் உள்ள தி ஓபராய் வன்யவிலாஸ் ஹோட்டல், ஆக்ராவில் உள்ள அமர்விலாஸ் ஹோட்டல், ஜெய்பூரில் உள்ள ராஜ்விலாஸ் ஹோட்டல் மற்றும் உதய்பூரில் உள்ள உதய்விலாஸ் ஹோட்டல் 2010-ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த 15 ஹோட்டல்கள் பட்டியலில் 1, 5, 13, 15 ஆகிய இடங்களை பிடித்துள்ளது.
இந்த 4 ஹோட்டல்கள் தான் ஆசியாவின் தலைசிறந்த ஹோட்டல்கள் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்துள்ளது.
இது குறித்து ஓபராய் குரூப் தலைவர் பி. ஆர். எஸ். ஓபராய் கூறுகையில்:
எங்களின் 4 ஹோட்டல்கள் ஆசியாவின் தலைசிறந்த ஹோட்டல்கள் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்திருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.
ரன்தாம்பூரில் உள்ள தி ஓபராய் வன்யவிலாஸ் ஹோட்டல் உலகிலேயே சிறந்ததாகவும் மற்ற 3 ஹோட்டல்கள் உலகின் சிறந்த 15 ஹோட்டல்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று அவர் கூறினார்.
ஹோட்டல்களில் உள்ள அறைகள் மற்றும் வசதிகள், இடம், சேவை, உணவு ஆகியவற்றின் அடிப்படையில் தான் இந்த தரவரிசை அளிக்கப்பட்டுள்ளது.