For Daily Alerts
Just In
கற்பு பேச்சு-சானியா, குஷ்பு மீதான வழக்கு இந்தூரிலும் தள்ளுபடி
இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும், எதை வேண்டுமானாலும் பேச உரிமை உள்ளது என்றும் கோர்ட் கூறியுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சுமன் ஸ்ரீவத்சவா தீர்ப்பின்போது கூறுகையில், கல்யாணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவு குறித்து குஷ்புவும், சானியாவும் பேசியது எய்ட்ஸ் நோயின் அபாயத்தை மனதில் கொண்டுதான்.
எனவே அவர்கள் தவறாக பேசியதாக கருத்தில் கொள்ள காரணமே இல்லை.
இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும், தனது மனதில் பட்டதை பேசும் சுதந்திரம் உள்ளது என்றார்.
கடந்த 2005ம் ஆண்டு கல்யாணத்திற்கு முந்தைய செக்ஸ் குறித்து குஷ்புவும், சானியாவும் அடுத்தடுத்து கருத்து தெரிவித்துப் பேசினர். இதனால் சர்ச்சை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மனோகர் பாம்ப்ரே என்பவர் இந்தூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் என்பது நினைவிருக்கலாம்.
Comments
Story first published: Saturday, July 10, 2010, 9:50 [IST]