காட்பாடி அருகே துண்டிக்கப்பட்ட தண்டவாளம்: எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது
காட்பாடி: காட்பாடி அருகே உள்ள ரயில் தண்டவாளம் துண்டிக்கப்பட்டிருந்தது உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இன்று காலை 11.30 மணி அளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடி அருகே சென்று கொண்டிருந்தபோது தண்டவாளத்தின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை பார்த்த ரயில் ஓட்டுனர் தக்க சமயத்தில் ரயிலை நிறுத்தினார். இதனால் விபத்து நேராமல் தடுக்கப்பட்டது. அந்த ரயிலில் பயணம் செய்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் ரயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தண்டவாளத்தை சீர் செய்து ரயிலை இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.