For Daily Alerts
Just In
பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்கு-கைது செய்ய போலீஸ் வேட்டை
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து சென்னையில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது சீமான் ஆவேசமாக பேசினார்.
இதையடுத்து அவர் மீது வன்முறை மற்றும் பிரிவினையைத் தூண்டியதாக வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து சீமானைக் கைது செய்வதற்காக விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்குப் போலீஸார் சென்றனர். ஆனால் சீமான் அங்கு இல்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து நான்கு தனிப்படைகளை அமைத்துள்ள போலீஸார் சீமானைக் கைது செய்ய தேடி வருகின்றனர்.
Comments
Story first published: Sunday, July 11, 2010, 16:22 [IST]